நாட்டில் அதிகரிக்கும் கொரோனா- சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 60 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 வீதமான மக்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாத்திற்குள் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என்பதனை பொறுப்புடன் கூறுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவின் ஸ்புட்னிக், கொவிஷீல்ட், பைசர் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜூன் மாதம் முதல் இந்த தடுப்பூசிகள் கிடைக்கப் பெற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இடைநிறுத்தப்படாது தொடர்ச்சியாக நாட்டு மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.