சிறிலங்காவின் தலை நகரில் குழப்ப நிலை! காவலரணை உடைக்க முயற்சித்ததால் ஏற்பட்டுள்ள பதற்றம்
சிறிலங்காவின் தலைநகரில் 12 எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்தின் போது காவல்துறையினர் தடுப்புக்காக வைத்திருந்த காவலரணை உடைத்து ஆர்ப்பாட்டகாரர்கள் உட்செல்ல முயற்சித்தமையினால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
எதிர்க்கட்சி தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் சற்று குழப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமைதியாக முன்னெடுக்கபட்டுள்ள போராட்டத்திற்கு காவல்துறையினர் தடுப்பு வாயில் வைத்து தடுக்க முயற்சித்துள்ளனர். இதனால் அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை தாண்டி செல்ல முயற்சித்துள்ளனர்.
காவல்துறையினரின் தடையினால் அதனை தடுக்க முயற்சிப்பதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.