தொடரும் முடக்கம் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு!
provincial
travel restrictions
gotabaya
sri Lanka
By Kalaimathy
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை ஒக்டோபர் 21 வரை நீடிக்க அரச தலைவர் தலைமையிலான கொவிட் செயலணி குழு கூட்டத்தில் முடிவு செய்ப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் கூடிய கொவிட்-19 கட்டுப்பாட்டு குழுக் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு, சுகாதார வழிகாட்டல்களின் கீழ், கடந்த 1 ஆம் திகதியுடன் தளர்த்தப்பட்டிருந்தது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை நீக்காதிருக்க கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளது.