முன்னாள் விடுதலைப்புலிகள் தொடர்பான விசாரணைகளுக்கு பாகிஸ்தானுடன் கைகோர்க்கத் தயாராகும் சிறிலங்கா!
பாகிஸ்தானுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவிருப்பதாக சிறிலங்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஹெரோயின் வியாபாரதத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக சிறிலங்கா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும் புலனாய்வு பிரிவுகளின் ஊடாகவும் ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இந்திய தேசிய புலனாய்வு முகாமை சிறிலங்கா அரசின் ஒத்துழைப்பை பெற தீர்மானித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும் இதுதொடர்பான விசாரணைகளுக்குசிறிலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரும் ஒத்துழைப்பு வழங்குவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.