துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது ஏன்..! பாதுகாப்பு அமைச்சின் கடுமையான எச்சரிக்கை
கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் தீவைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன எச்சரித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டிருக்கும் வன்முறை தொடர்பில் இன்று தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
மே 9 ஆம் திகதிக்கு பின்னர் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் தீவைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் காணொளி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் குற்றச்செயல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறிச் செயல்படுவதால் பாதுகாப்புப் படையினருக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.