தாழ்வாக வட்டமிட்ட சிறிலங்கா எயார்லைன்ஸின் புத்தம் புது விமானம்
SriLankan Airlines
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
சிறிலங்கன் எயார்லைன்ஸில் இணையும் புதிய எயார்பஸ் A330-200 விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது.
விமான நிலையத்தில் தரையிறங்க முன்னர், கொழும்பு கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் மிகவும் தாழ்வாக பறந்து செல்லும் காட்சியை பலரும் பார்வையிட்டுள்ளனர்.
குவிந்திருந்த ஏராளமான மக்கள்
அதன்போது, விமானம் வெறும் 1,500 அடி உயரத்தில் கொழும்பு துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவாவிற்கு பறந்தது.
இதன்படி, இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக சிறிலங்கன் எயார்லைன்ஸூடன் இணையும் இந்த புதிய விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி