மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சிறிநேசனுக்கு வந்த அச்சுறுத்தல் அழைப்பு! பகிரங்க குற்றச்சாட்டு
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் சீலன் என்பவர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், “எம்மைப் பற்றி தெரியும்தானே” என அதட்டலாக உரையாற்றினார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான உண்மைகளை வெளிக்கொண்டுலந்த இலங்கையில் ஊடகவியலாளர்கள் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அது மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நடைபெற்ற சாதனையாகும் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மட்டக்களப்பில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினைத்தை முன்னிட்டு மட்டக்களப்பைச் சேர்ந்த 23 இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி நிகழ்விலும், நடேசனின் நினைவேந்தலிலும் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என நம்மவர்கள் சொல்வதுண்டு அந்த அடிப்படையில்தான் தற்போதைய ஆட்சியில் சிலர் அகப்பட்டிருக்கின்றார்கள் என்பது உண்மை.

ஈஸ்டர் தாக்குதல் தாரிகள் உள்ளிட்ட பலர் அகப்பட்டு இருக்கிறார்கள். எனும் சிலர் சுத்தக்காரர்கள் போன்று முகப்புத்தகல்களில் எழுதுகின்றார்கள். இன்னும் சிலர் படுகொலை செய்கின்றவர்களை சுத்தப்படுத்த நினைக்கின்றார்கள்.
எவர்கள் கொலை செய்தார்கள் என்பதை மக்கள் மூலமாக நாங்கள் தகவலை அடைந்திருக்கின்றோம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசிங்கம் சிரேஸ்ட அரசியல்வாதி, சந்திரநேரு ஒரு சிரேஸ்ட அரசியல்வாதி, ரவிராஜ் சிவனேசன் இவ்வாறு பலரை கொலை செய்தார்கள். ரவீந்திரநாத், விரிவுரையாளர் தாம்பையா, ஆசிரியர் சதீஷ், ஆசிரியர் சோதிவடிவேல் உள்ளிட்ட கல்வியலாளர்களைக் கொலை செய்தார்கள்.
கொலைகள் என்பது இந்த நாட்டிலே கடந்த காலங்களில் கலைகள் போன்று நடைபெற்றிருந்தன. அவர்கள் எதுவும் செய்யலாம் ஆனால் தட்டிக் கேட்கக் கூடாது என்று அந்த அளவிற்கு அந்த சூழல் கொடூரமான சித்திரவதைகள காணப்பட்டிருந்தன.
அப்போதைய காலகட்டத்தில் சீலன் என்பவர் தொலைபேசியை எடுத்து அச்சுறுத்தலாக 60 சறம் வாங்கித் தரச்சொல்லிக் கேட்டார். எம்மைப் பற்றி தெரியும்தானே என அதட்டலாக என்னோடு தொலைபோசியில் கதைத்தார்.
அப்போதே காலகட்டத்தில் அவருடைய நோக்கம் என்னிடமிருந்து கப்பம் வாங்க வேண்டும் என்பதுதான். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் உருவாகி இருந்தன.
ஊடகவியலாளர்கள் படுகொலை
இலங்கையில் ஊடகவியலாளர்கள் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதுவே மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நடைபெற்ற சாதனையாகும். அவர்கள் இவ்வாறான படுகொலையில் உச்சத்தை தொட்டு இருந்தார்கள்.

அவர்கள் இழந்தது ஒரு பக்கமாக இருந்தாலும் அவர்களுக்குரிய நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை. குற்றவாளிகளை பாதுகாத்து பராமரிக்கின்ற ஒரு நாடாக இந்த நாடு இருக்கின்றதா என்பதை நாங்கள் சிந்திக்கின்றோம்.
என்னுடைய சொந்த தம்பிகூட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவர் எந்த ஒரு அமைப்பு சார்பிலும் செயற்பட்டு இருக்கவில்லை. 1989 ஆம் ஆண்டு 10 மாதம் முதலாம் திகதி கடத்தப்பட்டிருந்தார்.
அப்போது அவர்கள் என்னிடம் மூன்று இலட்சம் ரூபாய் பணம் கேட்டிருந்தார்கள். எமக்கு அவர்கள் யார் என தெரியாது நாங்கள் யாரிடம் காசு கொடுப்பது எனவும் தெரியாமல் அலைந்து திரிந்தோம்.
மட்டக்களப்பில் இருந்த பிளட் மோகன் என்பவரின் வால்களாக செயல்பட்டவர்கள்தான் இச்சம்பவம் நடைபெற்றது. தற்போதும் மட்டக்களப்பில் இரண்டுபேர் இவ்வாறு வால்களாக இருந்தவர்கள் உள்ளர்கள்.
இது இந்திய அமைதி காக்கும் படை இலங்கை இருந்தால் காலத்தில் நடைபெற்றிருந்த சம்பவங்கள் ஆகும். அக்கலாம் மோசமான காலமாகும். நினைத்து பார்த்திருக்க முடியாத சம்பவங்கள் ஒட்டுக்குழுக்களாலும், கூலிப்படைகளாலும் இந்த மண்ணிலே அரங்கேறி இருந்தன” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



