தாயக - கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

M. A. Sumanthiran S. Sritharan
By Erimalai Jan 27, 2026 10:31 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் சி சிறீதரன் விவகாரம் கொழும்பு மைய அரசியலை நடத்துவதா அல்லது தாயக மைய்ய அரசியலை நடத்துவதா என்ற பிரச்சனையே என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “2010 ம் ஆண்டு சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை இரா. சம்மந்தனே எடுத்திருந்தார். அது சம்மந்தனின் முழுப்பொறுப்பு. அதனை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருந்தது.

வீதியைக் கடந்த குடும்பஸ்தரை மோதித் தள்ளிய கப் வாகனம்

வீதியைக் கடந்த குடும்பஸ்தரை மோதித் தள்ளிய கப் வாகனம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு

அன்று முதலாவது எதிரி மகிந்த ராஜபாக்ச, அவரை பலவீனப்படுத்தவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த முடிவை எடுத்திருந்தது.

தாயக - கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன் | Sritharan Caught Political Conflicts Colombo Tamil

அன்று கஜேந்திரகுமாறும் சுரேஷ் பிரேமசந்திரனும் தமிழ் தேசிய கூட்மைப்பில் இருந்தமையால் அந்த முடிவுக்கு இணங்கி போகவேண்டியிருந்திருக்கலாம். அப்போது அந்த முடிவெடுத்தது தவறு என்பது எனது அபிப்பிராயம்.

அந்த நேரம் பொது வேட்பாளர் என்ற சிந்தனை அதிகரிக்கவில்லை. உண்மையில் அந்த இரண்டு பேரையும் ஆதரிக்க முடியாது. இரண்டு பேரையும் விடுத்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கலாம்.

அந்த இடத்தில் அவர்கள் விட்டது தவறு. ஆனால் அன்றைக்கு முதலாவது எதிரி மகிந்த ராஜபக்ச, அன்று சரத் பொன்சேகாவை தமிழ் தேசிய கூடாமைப்பு ஆதரிக்காமல் விட்டிருந்தாலும் மக்கள் ஆதரிக்கின்ற சூழல்தான் அப்போது இருந்தது.

ஆனால் அன்று இருந்த சூழலுக்கும் இன்று இருக்கின்ற சூழலுக்கும் வேறுபாடு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவளித்ததாக ஒரு குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது.

யாழ் மாவட்ட பெண் அரசியல் தலைமைகளை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

யாழ் மாவட்ட பெண் அரசியல் தலைமைகளை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!

தமிழ் மக்களின் அபிலாசை

அது தொடர்பில் அவர் பொது வெளியில் எதனையும் கூறவில்லை. அவர் ஆதரவு கொடுத்திருந்தால் உண்மையில் அது தவறதுதான்.

அதற்காக அவரை அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து விலக சொல்லி கேட்பது பொருத்தமில்லை. ஆனால் அதனை கேட்பவர் யார் எனில் அவர் சுமந்திரன்.

சுமந்திரன் ஏற்கனவே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக செயற்பட்ட ஒருவர். திருகோணமலை புத்தர் விகாரைக்கு ஆதரவாக இருந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இருந்தவர்.

ஆகவே சுமந்திரனுக்கு அதனை சொல்லுகின்ற நியாயப்பாடு இருக்கின்றது என்பதை கூறிவிட முடியாது.

இந்த விடயத்தில் சிறீதரன் இராணுவ தளபதிக்கு வாக்களித்திருந்தால் அது தொடர்பான காரணத்தை மக்களுக்கு சொல்லவேண்டும்.

உண்மையாக இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும், இனிமேல் அவ்வாறு நடக்காமல் இருப்பதற்குரிய உத்தரவாதத்தையும் வழங்கவேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

அதற்காக அவரை அரசியல் அமைப்பு பேரவையில் இருந்து வெளியேறவேண்டும் என கூறவேண்டிய தேவை இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.

சிறீதரனுக்கு எதிரான மிக மோசமான கருத்துக்களை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர முன்வைத்திருந்தார்.

இதற்கெல்லாம் பின்புலமாக நின்று செய்யப்பட்டவர் சுமந்திரன்தான்.

சுமந்திரன் கொழும்பு மைய அரசியலை நகர்துகின்ற ஒருவர். கொழும்பு மைய அரசியலை நகர்த்த வேண்டும் என்றால் சிறீதரனை இந்த அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். அவரை அகற்றாமல் கொழும்பு மைய்ய அரசியலை அவரால் செய்ய முடியாது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி