இலங்கையில் திவாலான அரச வங்கிகள் - வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் அரச வங்கிகள் ஏற்கனவே வங்குரோத்து நிலையில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் வைப்பாளர்களின் வட்டியை கூட செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
சில சமயங்களில் வைப்புச் செய்த பணம் கூட வராமல் போகலாம் என அவர் குறிப்பிட்டார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் தலைமைச் செயலகம் முற்றுகை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கோரி எதிர்வரும் 8ஆம் திகதி இராஜகிரியவில் உள்ள தேர்தல் தலைமைச் செயலகத்தை தேசிய மக்கள் படையைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 08ஆம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கோரி மாவட்ட மட்டத்தில் பாரிய பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
