தடம் புரண்ட சாகரிக்கா கடுகதி தொடருந்து! கடலோர மார்க்கத்தில் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்
கடலோர தொடருந்து போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு மாற்றாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா கடுகதி தொடருந்து இன்று காலை (24.04.2026) தடம் புரண்டதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடலோர தொடருந்து பாதையின் எதிர்கால போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பாக இன்று (24.04.2026) அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தொடருந்து திணைக்களம் முடிவு
இன்று மாலை 04.45 மணிக்கு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மாலை 06.15 மணிக்கும் பெலியத்தை, மாத்தறை மற்றும் காலிக்கு 03 பேருந்துகளும், மாலை 05.00 மணிக்கு அம்பலங்கொட மற்றும் ஹிக்கடுவாவிலிருந்து இரண்டு பேருந்துகளும் புறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பேருந்துகளில் பயணிக்க தொடருந்து பருவக்கால பயணச்சீட்டு அல்லது தொடருந்து பயணச்சீட்டு தேவைப்படும் என்றும், சம்பந்தப்பட்ட பயணிகளிடமிருந்து வேறு எந்தக் கட்டணமும் அறவிடப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாதுவையில் சாகரிக்கா கடுகதி தொடருந்து தடம் புரண்டபோதிலும், அலுவலக தொடருந்து சேவைகளை இரத்து செய்யாமல் இயக்க தொடருந்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிக்கு தொடருந்து சென்று, பயணிகளை உரிய இடத்தில் இறக்கிவிட்டு, பின்னர் அவர்களை மற்றொரு தொடருந்து மூலம் அவர்களின் சேருமிடத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்