பிரித்தானியாவை நோக்கி வரும் சந்திரா புயல்! மக்களுக்கு வெளியான முன்னறிவிப்பு
பிரித்தானியாவை சந்திரா புயல் தாக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வடக்கு அயர்லாந்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் அபாயம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதிகளில் பெரிய அலைகள் கடல் சுவர்களைத் தாண்டும் வாய்ப்பும் அதிகம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை நிலைமை
தென்-மேற்கு இங்கிலாந்தில் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை 30–50 மில்லிமீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில உயரமான பகுதிகளில் 80 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், ஸ்காட்லாந்து, வேல்ஸ், லண்டன் போன்ற பல பகுதிகளிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில உயரமான பகுதிகளில் மழை பனியாக மாறி, 5–20 செ.மீ வரை பனி பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்புகள்
இந்த புயல் காரணமாக விமான, தொடருந்து, கடல் போக்குவரத்து தாமதம் அல்லது ரத்து, மின்சாரம் துண்டிப்பு, வீதிகள் வெள்ளத்தில் மூழ்கல், மரங்கள் விழுதல், நிலச்சரிவு போன்ற அபாயங்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது பிரித்தானியாவை ஜனவரி மாதத்தில் தாக்கும் மூன்றாவது பெரிய புயலாகும். இதற்கு முன்பு Goretti மற்றும் Ingrid புயல்கள் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |