பத்தாவது வருடத்தை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்...
Missing Persons
Sri Lankan Tamils
By Independent Writer
Courtesy: Kabil
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமானது பத்தாவது வருடத்தை எட்டியதை முன்னிறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
வவுனியா தாய்பால் திணைக்களத்திற்கு முன்பாக 3291 நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் பந்தல் அமைத்து போராட்டம் நடாத்தி வரும் பந்தலிற்கு முன்பாகவே குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றிருந்தது.
இதன்போது காணாமல்போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.








| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி