நீர்வீழ்ச்சியைப் பார்யைிடச் சென்ற மாணவன் பலி!
Death
student
SriLanka
waterfall
By Chanakyan
கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.