கைதான கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு சிறை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளார்.
இரண்டு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றது தொடர்பான ஒரு சம்பவம் குறித்த விசாரணையின் தொடர்பில் அவர் இன்று காலை (18) கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்க சம்பளம்
கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவரின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர இரண்டு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் குறித்த விசாரணை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |