சுமந்திரனுக்கு பிரபல தமிழ் அதிபர் சட்டத்தரணி பகிரங்க சவால்!!

M. A. Sumanthiran S. Sritharan Sri Lankan Peoples
By Independent Writer Feb 20, 2024 01:34 PM GMT

 தமிழ் அரசுக்கட்சியை பாதுகாப்பேன் என்று சுமந்திரன் கூறுவது பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயல்' என்று பிரபல அதிபர் சட்டத்தரணி கே.பி. தவராஜா தெரவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தொடுக்கப்பட்டுள்ள வளக்கில் தமிழரசுக் கட்சிக்காக வாதாடுவதற்கு சுமந்திரன் முன்வந்த நிலையில், குறிப்பிட்ட வழக்கில் சுமந்திரன் சாட்சியாக முன்னிலையாக முடியுமே தவிர, தமிழரசுக் கட்சிக்காக வாதாடுவது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு எடுத்திருந்த தீர்மானங்களுக்கு எதிராகவும், தேசிய பேராளர் மாநாட்டுக்கு எதிராகவும் திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் பெறப்பட்டுள்ள இடைக்கால நீதிமன்ற கட்டாணைகள் தொடர்பாக அதிபர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 16.02.2024 அன்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில், கட்சியின் தலைவர்களும் வழக்கின் எதிராளியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் தனது சகாக்களும் கேட்டுக் கொண்டால் கட்சிக்காக தான் முன்னிலை ஆவதற்கும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த விடயம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட பிரபல சட்டத்தரனி தவராஜா, ‘ சட்டத்தின் பார்வையில் இந்தச் செய்தி சட்ட நுணுக்கமற்றது மாத்திரமல்ல சிறுபிள்ளைத்தனமானது. சட்டம் தெரிந்த யாவருக்கும் இலகுவாக புரியும் என்று கூறினார்.

அந்த வழக்குப் பற்றி சட்டத்தரனி தவராஜா மேலும் கூறும் பொழுது, யாழ்ப்பாணத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தமிழரசு கட்சிக்கு புதிதாகத் தேர்வான தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கு 31.01.2024 ம் எழுதப்பட்ட கடிதம் ஊடகங்களில் பிரசுரமாகி இருந்தது.

வழக்காளியான பீட்டர் இளஞ்செழியன் தாக்கல் செய்த இவ்வழக்கில் “வ4” என்று அடையாமிடப்பட்டு அந்தக் கடிதம் ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் வேளையில் சுமந்திரன் நீதிமன்றத்திற்கு ஒரு சாட்சியாகவே அழைக்கப்பட முடியும்.  

வழக்கின் சாட்சியாக அழைக்கப்படும் எவரேனும் அந்த வழக்கில் மற்றைய எதிராளிக்காக முன்னிலையாவது நடைமுறையில் சாத்தியமற்ற விடயமாகும்.

ஏனெனில் ஒரு வழக்கில் சாட்சியாக குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் அதே வழக்கில் சாட்சியமளிக்க மட்டுமே முடியும்.

அத்தோடு திருகோணமலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 6ம் எதிராளியாக சுமந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். எனவே எதிராளி தனக்குத் தானே வாதாட முடியுமே தவிர கட்சிக்காகவோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற எதிராளிகளுக்காகவோ எக்காரணம் கொண்டும் வாதாடுவதில்லை.

அவர் தன்னை காத்துக் கொள்ள தனக்காக மட்டுமே வாதாடமுடியும்.

மேலும் தனக்காக வாதாடுபவர்கள் சாட்சியம் அளிக்கும் சூழ்நிலையும் உருவாகலாம்.

ஒரு நடைமுறை சாத்தியமற்ற விடயத்தை எந்த நீதிமன்றமும் அனுமதிப்பதும் இல்லை கடைப்பிடிக்கப்படுவதுமில்லை.

சட்டத்தின் அடிப்படைகள் மேலோட்டமாக தெரிந்த ஒருவரால் கூட இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய இந்த விடயத்தை அதிபர் சட்டத்தரணி சுமந்திரன் கூறியிருப்பதானது,

பிரதான விடயத்தை திசை திருப்புவதற்காக மாத்திரம் விடுக்கப்பட்ட ஒன்றாகவே என்னால் அவதானிக்க முடிகின்றது.

தமிழரசுக்கட்சியை பாதுகாப்பேன் என்பது பிள்ளையையும் கிள்ளி விட்டுதொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயல்பாடாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்