திடீர் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சுரேஷ் சாலே
CID - Sri Lanka Police
Easter Attack Sri Lanka
Colombo Hospital
Suresh Salley
By Sumithiran
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் சுரேஷ் சாலே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் சாலே தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அவரது உடல்நிலையைப் பரிசோதிப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் முன்னர் அனுமதி கோரியிருந்தபோதிலும், அது வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மருத்துவ ஆலோசனையின் பேரில் அனுமதி
இந்த நிலையில் சாலே நேற்று (24) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலை குறித்துத் தெரிவிக்கப்பட்ட பின்னர், அவர் நீதிபதியால் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் ஒரு மருத்துவரிடம் அனுப்பப்பட்டார்.
மருத்துவ ஆலோசனையின் பேரில் அவர் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்