யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நீண்ட காலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - குருநகர் 5மாடி பகுதியில் வைத்து நேற்றைய தினம் (19) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்வர் 22 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளதுடன் அவரிடமிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் காவல்துறை காவலரணில் கடமையில் இருந்த காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
