துறைமுகத்தில் இடம்பெறவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்
                                    
                    Port of Colombo
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Strike Sri Lanka
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    துறைமுகத்தில் இன்று (28) இடம்பெறவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சம்பள அதிகரிப்பு கோரியதன் அடிப்படையில் இன்று அடையாள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்திருந்தது.
தடை உத்தரவு காரணமாக
எவ்வாறாயினும், தொழிற்சங்க நடவடிக்கைக்கு துறைமுக அதிகார சபையினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாக, தமது தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் திரு.நிரோஷன் கோரகன தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்