ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மீட்கப்பட்ட சடலம்
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Pavi
ஹொரண காவல் பிரிவுக்குட்பட்ட இலிம்ப சந்தியில், கால்வாய்க்கு அப்பால் அமைந்துள்ள வெறிச்சோடிய காணியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் பற்றி ஹொரண காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் பொகுணுவிட்ட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என காவல்துறை விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீதவான் விசாரணை
இதை தொடர்ந்து சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்