வெள்ளையர்களுக்கு எதிரான பாகுபாடு குற்றச்சாட்டு: தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணக் கட்டுப்பாடு
வெள்ளையர்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை ஆதரிப்பதாகக் குற்றம்சாட்டப்படும் தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிவிப்பின்படி,
''இன அடிப்படையிலான பாகுபாடு, இழப்பீடு வழங்காமல் நிலம் பறிமுதல் செய்வதற்கு அனுமதிக்கும் கொள்கைகள் அல்லது சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் பொறுப்பு கொண்டதாகக் கருதப்படும் வெளிநாட்டு நபர்களின் அமெரிக்க விசாக்கள் ரத்து செய்யப்படலாம்.
புதிய விசா விண்ணப்பங்கள்
அல்லது அவர்களின் புதிய விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்" என கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) தலைமையிலான அரசாங்கம் வெள்ளையர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்க நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது.

குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் ஆஃப்ரிகானர் சிறுபான்மையினர் தொடர்பான கொள்கைகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்க அரசு நிராகரித்துள்ளது.
அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் புதிய விசா கட்டுப்பாடுகள் குறித்து கவலை தெரிவித்ததுடன், தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு கொள்கைகள் சில தரப்பினரால் தவறாக சித்தரிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
அமெரிக்கா தனது நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக, சில சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படாத தனியார் நிலங்களை இழப்பீடு இல்லாமல் அரசால் கையகப்படுத்த அனுமதிக்கும் தென்னாப்பிரிக்க சட்டம், கருப்பின மக்களுக்கான சம வாய்ப்புகளை அதிகரிக்கும் முன்னுரிமைக் கொள்கைகள் மற்றும் வெள்ளை விவசாயிகள் தொடர்பான சில வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படவுள்ள அதிகாரிகளின் பெயர்களை அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |