இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Magistrate Court Easter Attack Sri Lanka India
By Dharu Sep 16, 2026 12:21 AM GMT
Report

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான சதித்திட்டப் பின்னணியும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள முதலாவது புலனாய்வுப் படைப்பிரிவு மற்றும் மட்டக்களப்பு, கிரிதலே ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமூன்றாவது இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு தொடர்பான விசாரணைகளிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி

தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமான எச்சரிக்கை! ஈஸ்டர் தாக்குதல் வாக்குமூலத்தில் அதிர்ச்சி

தம்பியன் என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர்

இராணுவ புலனாய்வுப் பிரிவினால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘தம்பியன்’ என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர் ஊடாக, சஹ்ரான் ஹாஷிம் தாக்குதலொன்றை நடத்தத் தயாராகி வருவதாகவும், வவுனதீவு காவல்துறை காவலரண் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சஹ்ரானே காரணம் எனவும் புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல் | Team Including Sarah Jasmine Sent Ind Easter Case

எனினும், அந்தத் தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு, வவுனதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மீது சுமத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்னல் ரணவீர மற்றும் கிரிதலே இராணுவ புலனாய்வுப் படைப்பிரிவின் தலைவராக இருந்த கர்னல் மத்துமகே ஆகியோர் இந்தத் தகவல்களை புலனாய்வு பணிப்பாளரிடம் முறையாகத் தெரிவிக்காமல் மறைத்ததாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கைத் தகவல்கள் உரிய முறையில் பகிரப்படவில்லை என குற்றச்சாட்டு 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் ‘ராசிக்’ என்ற உளவாளி வழங்கிய தகவல்கள், வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளால் ஏப்ரல் 3ஆம் திகதி வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் மற்றும் ஏப்ரல் 20ஆம் திகதி தேவாலயங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என கிடைத்த தகவல்கள் ஆகியவையும் முறையாகப் பரிமாறப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பதற்காக புலனாய்வுப் பிரிவின் குறிப்பிட்ட குழுவொன்று செயற்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அமெரிக்க திட்டம்! முகம்மது ஃபஸலின் பரபரப்பு குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அமெரிக்க திட்டம்! முகம்மது ஃபஸலின் பரபரப்பு குற்றச்சாட்டு

சாரா ஜாஸ்மின் இந்தியாவுக்கு  

2014ஆம் ஆண்டு முதல் அரச புலனாய்வு சேவையின் (SIS) பயங்கரவாத குழுக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய காவல்துறை பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டார, சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் ரில்வான் உள்ளிட்ட 94 பேரைக் கொண்ட பயங்கரவாத பட்டியலைத் தயாரித்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல் | Team Including Sarah Jasmine Sent Ind Easter Case

தாக்குதல்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு சென்ற அவர், சஹ்ரானின் சகோதரர் ரில்வானை சந்தித்து தேநீர் அருந்தி கலந்துரையாடியதாகவும், எனினும் அவரைக் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் ரில்வான் கைது செய்யப்பட்டிருந்தால், பின்னர் இடம்பெற்ற பேரழிவைத் தடுக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருதில் சஹ்ரானின் உறவினர்கள் 16 பேர் உயிரிழந்தமை, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டமை, சாரா ஜாஸ்மின் உள்ளிட்ட சிலர் படகுகள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டமை ஆகியவற்றின் பின்னணியிலும் ஆழமான சதித்திட்டம் இருந்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016