தாயாரின் இறுதிச் சடங்கு இன்று! அரவிந்த டி சில்வாவிற்கு பிடியாணை
SriLankan Airlines
Law and Order
Kapila Chandrasena
By Jaso
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு இன்று (16) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி சம்பந்தப்பட்ட வழக்கில் ஜாமீன்தாரர்களாக முன்னிலையாகியிருந்த அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
தாயாரின் இறுதிச்சடங்கில் பிடியாணை
அரவிந்த டி சில்வாவின் தாயார் ராணி டி சில்வா செப்டம்பர் 14 ஆம் திகதி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனச் சடங்குகள் நடைபெறும் இன்றைய நாளில் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி