யாழ்ப்பாணத்தில் நடந்த பயங்கரம்..! இருவர் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் - தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.
இன்று(03) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கோண்டாவில் மற்றும் இணுவில் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 30 வயது மதிக்கத்தக்கவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி