தமிழர் பகுதியில் நடந்த வாள்வெட்டு சம்பவம்! காவல்துறையிடம் சிக்கிய ஐவர்
வவுனியா(vavuniya) - சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று (08) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, உக்குளாங்குளம், கூமாங்குளம் மற்றும் வேலங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாள்வெட்டு சம்பவம்
வவுனியா - சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய செல்வநிரோயன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்தார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஓமந்தை காவல்துறையினர் வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனச் சாரதியை அன்றைய தினமே கைது செய்திருந்தனர்.
மேலும், வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |