தமிழ் மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் போலி உறுதிமொழிகள்! சைக்கிள் தரப்பு குற்றச்சாட்டு
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு, அவர்களை தமது பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு, துறைநீலாவணை பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய த.சுரேஸ், கடந்த காலங்களில் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், தேர்தலுக்குப் பின்னர் அவர்களின் பிரச்சினைகள் உரிய முறையில் கவனிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.
76 வருடங்களாக இன அடக்குமுறை
மேலும் கருத்து தெரிவித்த அவர் பட்டிருப்பு தொகுதி என்றால் அது தமிழ் தொகுதி இங்கு தேசிய கட்சிகளே மாற்றுக் கட்சிகளே ஆசனங்களை பெறமுடியாது துறைநீலாவணை, கல்லாறு , பட்டிருப்பு தமிழ் தேசிய உணர்வுடன் தமிழ் என்ற ஒரு திமிருடன் இருக்கின்றோம் என்ற மக்கள் வாழும் பகுதி.

அதனடிப்படையில் இந்த சந்தர்ப்பங்களை பாவித்து அந்த வாக்குகளை சூறையாடி தங்களுடைய சுயலாபங்களுக்காக அந்த வாக்குகள் பயன் படுத்தப்படுகின்றது. தேர்தல் காலங்களில் இங்கு வந்து போரடினோம் மாவீரர்களை இழந்திருக்கிறோம்.
என கூறி எங்கள் மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற்றுக் கொண்டு நாடாளுமன்றம், பிரதேச சபை பிரதிநிதித்துவத்தை பெற்று அதிகாரங்கள் கைக்கு கிடைத்த பின்னர் அந்த மக்களின் குறைகளை கேட்டறிவதற்கு யாரும் வருவதில்லை.
இந்த மண்ணில் 76 வருடங்களாக ஒரு மிக பெரிய இன அடக்குமுறைக்குள் இருக்கின்றோம் சிங்கள பேரினவாதம் எங்களை அடக்கி ஒடுக்குகிறது ஒவ்வொரு தலைவர்களும் இந்த நாட்டை ஆட்சி செய்ய வருகின்றனர் இவர்கள் ஒவ்வொருவரும் உரிமை தருகின்றோம் பூனையை யானை ஆக்குவோம் என்று சொல்லிக் கொண்டு மாறாக தமிழர்களுடைய இருப்பை இல்லாமல் செய்வதற்கான புதிய புதிய சட்டங்களை இயற்றி தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்தது தான் வரலாறு.
இதனைத்தான் இந்த புதிய அரசும் செய்கிறது உலகத்துக்கு சுபீட்சமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு தமிழர்களை தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் மிக கட்சிதமாக எம் இனத்தவர்களையே வாங்கி வெற்றி கண்டுள்ள தோற்றப்பாடு தெரிகிறது உண்மையில் புது புது சட்டங்கள் என்பது எமது மக்கள் ஜனநாயக ரீதியாக கருத்துக்களை பேச முடியாத அளவிற்கு ஊடகத்துறை மற்றும் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் நிறுவனங்களை அடக்குவதற்காக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது இதன் நோக்கம் இது சிங்கள பௌத்த நாடு என்ற சிங்கள பேரினவாதத்தின் அடிப்படை சிந்தனையாக இருக்கின்றது.
தமிழர்கள் ஒரு தேசிய இனம் இந்த இனத்தின் தனித்துவம் பேனக்கூடாது என்பதற்காக புதுபுது திணைக்களங்களை உருவாக்கி தமிழர்களின் காணிகளை அபகரித்து வருகின்றனர்.
தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஏன் புத்தவிகாரை என்றால் தமிழர்களை இனழிப்பு செய்து பௌத்த நாடாக்குவது திட்டம் இதன் உள்நோக்கம் என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |