கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழர்
கனடாவில் தமிழர் ஒருவர் கைது
கனடாவில் தமிழர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
26 வயதான நிருசன் ஷேக்ஸ்பியர்தாஸ் என்ற தமிழர் கைது செய்யப்பட்டு புதன்கிழமை டொராண்டோ நீதிமன்ற அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
சனிக்கிழமை மாலை யோர்க் ஸ்ட்ரீட் மற்றும் ப்ரெம்னர் பவுல்வார்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இரவு 7.30 மணிக்குப் பின்னர் டொராண்டோ காவல்துறையினர் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டனர். டொராண்டோவைச் சேர்ந்த 24 வயதான ஸ்டீபன் லிட்டில்-மெக்லாக்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் ஸ்டேஷனுக்குள் ஓடியதால், சனிக்கிழமை இரவு யூனியன் ஸ்டேஷனை இரண்டு மணி நேரம் மூடுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். அந்த நேரத்தில், மற்றொரு சந்தேக நபர் தெற்கே லேக் ஷோர் பவுல்வார்டை நோக்கி ஓடினார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் இப்போது ஷேக்ஸ்பியர்தாஸைத் தவிர வேறு யாரும் இதில் ஈடுபட்டதாக நம்பவில்லை என்று கூறுகிறார்கள்.
இந்த விசாரணையில் ஒரு சந்தேக நபர் மட்டுமே தேடப்படுகிறார்," என டொராண்டோ காவல்துறை சேவையின் செய்தித் தொடர்பாளர் டேவிட் ஹாப்கின்சன் புதன்கிழமை ஒரு மின்னஞ்சலில் தெரிவித்தார்.
