வடக்கு - கிழக்கு மக்களுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
🛑 புதிய இணைப்பு
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு மற்றும் கிழக்கு பாரிய கையொழுத்து போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போராட்டமானது எதிர்வரும் 29 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று (25) தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
சர்வதேச விசாரணை
இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவர் த. சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , சமத்துவ கட்சியின் பொது செயலாளர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோருடன் தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கு பற்றி இருந்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலன புதைகுழிகள் வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.
மனித புதைகுழி
தற்போது செம்மணி மனித புதைகுழிகளில் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றது அதில் 140 இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில் 90 வீதமானவை ஆடைகள் அற்ற நிலையிலையே மீட்கப்பட்டுள்ளன அத்துடன் குழந்தைகளின் எழும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு சர்வதேச விசாரணைகள் கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் அகழ்வு பணிகள் முன்னெக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது” என தெரிவித்துள்ளனர்.
🛑 முதலாம் இணைப்பு
யாழ் (Jaffna) செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் சந்திபொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒன்று கூடல் யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகவும், அதேநேரம் தனித்தனியாகவும் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு தீர்மானங்களையும் எடுத்திருக்கின்றன.
தமிழ்க் கட்சிகள்
இந்தநிலையில், யாழ். நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (25) காலை தமிழ்க் கட்சிகள் பலவும் மீண்டும் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் இணைத் தலைவர்களும் அதேபோன்று ஏனைய சில கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தச் சந்திப்பின் முடிவில் தமிழ்க் கட்சிகள் இணைந்து இன்று (25) மதியம் விசேட ஊடக சந்திப்பொன்றையும் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

