தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறல் : மூல காரணத்தை அம்பலப்படுத்திய இந்திய வெளியுறவு அமைச்சர்
தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் காரணத்தை தக்க ஆதாரத்தடன் வெளியிட்டுள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்.
தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறும் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு கடந்த 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே மூலகாரணம்'', என அவர் கூறியுள்ளார்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக ராஜ்யசபாவில் அவர் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
பலர் படகு உரிமையாளர்கள்
நேற்று(28) வரை இலங்கை சிறைகளில் 86 இந்திய கடற்றொழிலாளர்கள் இருந்தனர். இன்று(27) 11 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம் 97 பேர் அந்நாட்டு சிறையில் உள்ளனர். 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 3 பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர். தண்டனை அனுபவிப்பவர்களில் பலர் படகு உரிமையாளர்கள் அல்லது மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்தில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.
தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு மூல காரணம்
இதனை கையாள்வது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. 1974 ல் அப்போது மத்தியில் இருந்த அரசு, மாநில அரசுடன் ஆலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரையறுத்த போது தான் இந்த பிரச்னை தொடங்கியது. பிறகு 1976 ல் மீன்பிடிப்பது தொடர்பாக எல்லை வரையறை தொடர்பான கடித பரிமாற்றம் நடந்தது.
எனவே 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக உள்ளது. இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
