வட கிழக்கு மக்களின் போராட்டம்: அநுர தரப்பிடம் கேள்வியெழுப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Gajendrakumar Ponnambalam Janatha Vimukthi Peramuna National People's Power - NPP
By Shadhu Shanker Oct 27, 2024 11:54 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுக்கும் ஒரு போராட்டத்திலாவது தேசிய மக்கள் சக்தி தரப்பினர் கலந்து கொண்டுள்ளனரா என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் நேற்றையதினம் (27) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ''நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடக்கின்றது. இந்த 15 வருடங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

ஜனாதிபதி அநுர தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி அநுர தொடர்பில் டக்ளஸ் வெளியிட்ட அறிவிப்பு

ஜே.வி.பி தரப்பினர் 

வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி கலந்து கொண்டுள்ளதா? வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. 

வட கிழக்கு மக்களின் போராட்டம்: அநுர தரப்பிடம் கேள்வியெழுப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Tamil National Alliance Rejects Unitary Rule

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தனியார் காணிகள் அபகரிப்பிற்கு எதிராக பாதிக்கப்பட்ட எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இந்த ஜே.வி.பி தரப்பினர் அல்லது தேசிய மக்கள் சக்தி என கூறப்படுகின்றவர்கள் கலந்து கொண்டுள்ளார்களா? இல்லை.

இடைக்கால அறிக்கையை நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இலங்கையின் பிரதான அமைப்பாக அரசியல் அமைப்பு காணப்படுகிறது. அந்த அரசியல் அமைப்பை மூன்று தடவை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று அரசியல் அமைப்பையும் எமது மக்கள் நிராகரித்தனர்.

நாட்டின் பிரதான சட்டத்தை இரண்டாவது இனம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது என்றால் அதற்கான அர்த்தம் அந்த இனத்திற்கு ஓர் இனப் பிரச்சினை உள்ளது என்பதேயாகும்.

சர்வதேச சமூகம் 2012 ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு தீர்மானங்களையும் தெளிவாக வலியுறுத்துகின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்: அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்: அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஒற்றையாட்சி அரசியல் 

அப்படி கூறுகின்றபடியால் போருக்கு பின்னர் ஒரு தீர்வு காண்பதற்கான நாடகமாவது இங்கு நடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.

வட கிழக்கு மக்களின் போராட்டம்: அநுர தரப்பிடம் கேள்வியெழுப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Tamil National Alliance Rejects Unitary Rule

ஒரு தீர்வில்லாத யோசனை கொண்டு வந்தால் அதை தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். நிராகரித்தால் இனப்பிரச்சினை தொடர்ந்து இருக்கும், அப்படி தொடர்வதாக இருந்தால் சர்வதேச மட்டத்தில் தமக்கு தேவையற்ற அழுத்தங்கள் வரும் என்கிற ஒரு பிடியாவது நாங்கள் இன்று வைத்துள்ளோம்.

அந்த பிடியை இல்லாமல் செய்வதற்கு தான் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டு, வடக்கு கிழக்கில் சரித்திரத்தில் முதல் தடவையாக எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பெரும்பான்மை ஆதரவோடு, அதை நிறைவேற்றி உலகத்திற்கே தமிழ் மக்கள் இந்த அரசியல் அமைப்பை ஆதரித்து விட்டார்கள் என்ற ஒரு செய்தியை காட்டுவதற்கு முயல்கின்றார்கள்.

இதுதான் எமக்கு இருக்கின்ற ஒரு மிகப்பெரிய சவால்.ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதனை நிராகரிக்கக்கூடிய,செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக இந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளான மணிவண்ணன் ஆதரவாளர் - வைத்தியசாலையில் கைவிலங்கிட்ட காவல்துறையினர்

தாக்குதலுக்குள்ளான மணிவண்ணன் ஆதரவாளர் - வைத்தியசாலையில் கைவிலங்கிட்ட காவல்துறையினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி