ரஷ்யா - உக்ரைன் யுத்தம்! அணு ஆயுத போருக்கு வழி வகுக்குமா?
ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் 3ஆம் உலக போருக்கு வித்திடுமோ? என்ற பீதி நிலவி வருகிறது. அதே போல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அது அணு ஆயுத தாக்குதலாக மாறி விடுமோ? என்ற பதட்டமும் ஏற்பட்டு இருக்கிறது.
உலக அளவில் வல்லரசு நாடுகள் அணு ஆயுத போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை தயாரித்து வருகின்றன. தங்கள் நாட்டு பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக தெரிவித்து இருக்கின்றன.
நாடுகள் இடையே சண்டை ஏற்பட்டால் அதில் அணு ஆயுத தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது என்று நீண்ட காலமாகவே தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சில வாரங்களாக போர் பயிற்சியில் ஈடுபட்ட ரஷ்யா கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணு ஆயுத போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஏவுகணைகள் மூலம் அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் பயிற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
You May Like This