தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மிலிந்த மொர கொடவின் நூல்
முன்னாள் நீதி அமைச்சரும் மற்றும் இந்தியாவுக்கான (India) இலங்கை தூதுவருமான மிலிந்த மொர கொடைவினால் (Milinda Moragoda) சிங்கள மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தமிழாக்கமான மலரும் யுகத்திற்கு நூலின் வெளியீட்டு நிகழ்வானது இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்றைய தினம் (01) கொழும்பு (Colombo) பம்பல பெட்டி கதிரேசன் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வானது, சர்வ மத தலைவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளதுடன் வரவேற்புரையினை பார்த்து பைண்டர் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பாலசுந்தரம் நிகழ்த்தியுள்ளார்.
தமிழ்ச் சங்கத் தலைவர்
பிரதம உரையினை கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் கே.ரகுபரன் வழங்கியதுடன் இந்த நூலின் மொழியாக்கத்தை செய்த வயலட், மொரகொடவின் பாதிரியாரான ஜெனிபர் மொரகொடவினால் (Jennifer Moragoda) பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்நிகழ்வில், முன்னாள் பிரதம நீதிபதி ஸ்ரீபவன், சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தின் தலைவர் பேராசிரியர் அன்குரன் டுட்டா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளியல் விரிவுரையாளர் கணேச மூர்த்தி, சட்ட கற்கைகள் மற்றும் சமூக விஞ்ஞான துறை சிரேஷ்ட விரிவுரையாளர் யசோதரா கதிர்காம தம்பி ஆகியோர் சிறப்பு உரையாற்றியுள்ளனர்.
மேலும், குறித்த நூலின் முதற் பிரதி நூலாசிரியர் மிலிந்த மொரகொடவினால் வருகை தந்த அனைத்து அதிதிகள் மற்றும் துறை சார்ந்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


