தமிழ், சிங்கள தரப்புக்கள் பாரிய மோதல் - தமிழர் பகுதியில் பதற்றம் ; குவிக்கப்பட்டுள்ள இராணுவம்! (காணொளி)
Sri Lanka Army
Sri Lanka Police
Trincomalee
By Pakirathan
இரண்டாம் இணைப்பு
இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை, திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய கிராம மக்களுக்கிடையில் இன்று மதியம் பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதனை கட்டுப்படுத்தும் முகமாக அங்கு காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடற்பரப்பில் சிறுபான்மையினர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலமை
குறித்த மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் பெருமளவிலான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி