கச்சத்தீவு திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக கடற்றொழிலாளர்கள்!
கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்க்கான ஏற்பாட்டு கூட்டத்தை பாரம்பரிய விசை படகு கடற்றொழிலாளர்கள் இன்று (11.01.2026) புறக்கணித்துள்ளனர்.
1974 ஆண்டின் கச்சத்திவு ஒப்பந்த அடிப்படையில் பாரம்பரிய கடற்றொழிலாளர்கள் நாட்டுப் படகுகளில் கச்சத்திவு திருவிழாவிற்கு சென்று தமது நேர்த்திக்கடன் செய்வதற்கான உடன்பாடு இருந்து வந்தது.
விசைப்படகு
இந்நிலையில், சில வருடங்களாக கச்சத்தீவு திருவிழா வணிக ரீதியாக விசைப்படகுகளில் கட்டணம் அறவீடு செய்து சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று ஒரு வணிக சுற்றுலா பயணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பாரம்பரிய நாட்டு படகில் கச்சதீவு திருவிழாவிற்கு செல்வதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இதன்காரணமாக, இன்று (11.01.2026) இராமேஸ்வரம் புனித சூசையப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற கச்சதீவு திருவிழா ஏற்பாட்டு கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்னர் நாட்டு படகுகளில் கச்சதீவு திருவிழாவிற்கு நாட்டு படகுகள் செல்வதற்கு அனுமதி மறுக்கபட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தை நாடி 1974 ஆம் ஆண்டின் ஒப்பந்த பிரகாரம் நாட்டு படகில் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு செல்லலாம் என்ற அனுமதியை பெற்றிருந்தனர்.
எனினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள திருவிழாவிற்கு தமது நாட்டு படகில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கூறி கூட்டத்தை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |