யாழ் கடற்பரப்பில் கைதான 31 இந்திய கடற்றொழிலாளர்கள்...! பிறப்பிக்கபட்ட உத்தரவு

Vijay Indian fishermen Fishing Chennai Sri Lanka Navy
By Thulsi Nov 04, 2025 05:39 AM GMT
Report

புதிய இணைப்பு

வடபகுதி கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பருத்திதுறை நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த 31 பேரும் 3 படகுகளுடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில், அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலை  

இதேவேளை, குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட மேலும் 4 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

யாழ் கடற்பரப்பில் கைதான 31 இந்திய கடற்றொழிலாளர்கள்...! பிறப்பிக்கபட்ட உத்தரவு | Tck Leader Vijay Blame Srilankan Government

குறித்த நால்வர் தொடர்பில், சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

எனினும், சந்தேகம் தீர்க்கப்பட்ட நிலையில், நாளைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 74 கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த பல ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட 242 மீன்பிடிப் படகுகளும் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன இதே வேளை வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 40 படகுடன் 310 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - பிரதீபன்

முதலாம் இணைப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் (TVK) விஜய் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக கடற்றொழிலாளர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்

யாழ் கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்

உடனடியாக விடுவிக்க வேண்டும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையளிக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள நம் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும்.

மற்ற மாநில கடற்றொழிலாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் கடற்றொழிலாளர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும்.

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அழுத்தமாக வலியுறுத்துகிறேன்

மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும்.

யாழ் கடற்பரப்பில் கைதான 31 இந்திய கடற்றொழிலாளர்கள்...! பிறப்பிக்கபட்ட உத்தரவு | Tck Leader Vijay Blame Srilankan Government

இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புலம்பெயர் தமிழர்களின் தமிழீழ கோரிக்கை..!  மறைமுக காய்நகர்த்தலில் அநுர அரசு

புலம்பெயர் தமிழர்களின் தமிழீழ கோரிக்கை..!  மறைமுக காய்நகர்த்தலில் அநுர அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026