கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இராதாகிருஸ்ணன் உறுதி!

Sri Lanka Upcountry People Ranil Wickremesinghe V S Radhakrishnan
By Beulah Nov 25, 2023 03:26 PM GMT
Report

சம்பள நிர்ணய சபையா அல்லது கூட்டு ஒப்பந்தமா என்று தற்போது பேசப்படுகிறது, என்னை பொறுத்தவரை கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நீர் வழங்கல்,தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

விசா இல்லாமல் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி!

விசா இல்லாமல் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி!

தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி

“1994 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மலையகத்துக்கு என்று தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்ற அமைச்சை உருவாக்கி, காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமானுக்கு அந்த அமைச்சை வழங்கினார்.

கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இராதாகிருஸ்ணன் உறுதி! | Tea Eastet Collective Agreement

மலையகத்துக்கு என்று ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டதன் பின்னரே மலையகத்துக்கான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட காணி விவகாரத்துக்காக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பெருந்தோட்ட பகுதிகளுக்கு சகல துறைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

லயன் குடியிருப்புகளில் தீ விபத்து

பெருந்தோட்ட பகுதிகளில் லயன் குடியிருப்புகளில் தீ விபத்து வழமையானதொன்றாக காணப்படுகிறது.

கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இராதாகிருஸ்ணன் உறுதி! | Tea Eastet Collective Agreement

கடந்த ஆண்டு 795 குடும்பங்களை சேர்ந்த 3306 பேரும்,2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து 10 மாத காலப்பகுதியில் 73 குடும்பங்களை சேர்ந்த 307 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பெருந்தோட்ட பகுதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களின் போது அனர்த்த முகாமைத்துவ நிலையம் கவனத்திற் கொள்ளாமல் செயற்படுகிறது.

பெருந்தோட்ட கம்பனிகள் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுவது நியாயமற்றது.

காணப்படும் சட்ட சிக்கல்களை அனர்த்தங்களின் போதும்,அதன் பின்னரான போதும் குறிப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது.

கூட்டு ஒப்பந்தம்

சம்பள நிர்ணய சபையா அல்லது கூட்டுவொப்பந்தமா என்று தற்போது பேசப்படுகிறது. என்னை பொறுத்தவரை கூட்டுவொப்பந்தம் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இராதாகிருஸ்ணன் உறுதி! | Tea Eastet Collective Agreement

கூட்டுவொப்பந்தம் இல்லாத காரணத்தால் தோட்ட கம்பனிகள் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றன.

ஆகவே கூட்டுவொப்பந்தம் தொடர்பான தீர்மானங்களுக்கு மலையக மக்கள் முன்னணி இணக்கம் தெரிவிக்கும்.

மலையகம் தொடர்பில் குறைகளை மாத்திரம் குறிப்பிட முடியாது.பல நிறைகளும்,முன்னேற்றங்களும் காணப்படுகின்றன.

எமது மலையக இளைஞர் யுவதிகள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சாதிக்கிறார்கள்.

எதிர்வரும் மாதம் 24 ஆம் திகதி மலையகம் 200 நிகழ்வை நாங்கள் நடத்தவுள்ளோம்.

எமது சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் நவீன அடையாளத்தை நான் உறுதிப்படுத்த வேண்டும். 

ஸ்ரீபாத கல்லூரி

அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். எமது அரசாங்கத்திலும் பல வாக்குறுதிகளை வழங்கினார் ஆனால் எதனையும் செய்யவில்லை.

கூட்டு ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் : இராதாகிருஸ்ணன் உறுதி! | Tea Eastet Collective Agreement

அவர் எவ்வாறானவர் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். கொட்டகல பகுதியில் கல்வியியற் கல்லூரி அமைக்கப்பட்ட போது அதற்கு ஸ்ரீ பாத என்று பெயர் சூட்ட வேண்டும், தமிழ் மாணவர்களுக்கு முழுமையான அங்கீகாரம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமான் வலியுறுத்தினார்.

அதன் போது தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீபாத கல்லூரியில் 75 சதவீதம் தமிழ் மாணவர்களுக்கும்,25 சதவீதம் சிங்கள மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தற்போதும் அவர் இந்த நிலையில் இருந்து மாற்றமடைந்திருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.”என்றார்.

2024 இல் நாட்டு மக்களுக்கு நெருக்கடி : துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை!

2024 இல் நாட்டு மக்களுக்கு நெருக்கடி : துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024