ஆசிரியர் பரீட்சைகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்
Ministry of Education
Harini Amarasuriya
Teachers
By Dilakshan
இடம்பெற்று வரும் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளின்படியே ஆசிரியர் பரீட்சைகள் நடத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்காலத்தில் இரண்டு ஆசிரியர் பரீட்சைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப நடத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
அத்துடன், பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பட்டம் பெற்ற திகதிகள் தொடர்பான நிபந்தனைகளை திருத்துமாறு நீதிமன்றத்திடம் கோருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து மொனராகலை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்க மொனராகலை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது பிரதமர் இவற்றை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி