நாமலின் பரிந்துரைக்கமைய நசீர் அஹமட்டால் நியமிக்கப்பட்ட பிரதானி - வெளியானது அறிவிப்பு!
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் கீழ் இயங்கும் ஜீ.எஸ்.எம்.பீ தொழில்நுட்பட சேவைகள் என்ற நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிக்கு இரண்டு பேரின் பெயர்களை மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச, சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு கடந்த 6 ஆம் திகதி அனுப்பியுள்ள நாடாளுமன்ற கடித தலைப்புடன் கூடிய கடிதம் மூலம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதனடிப்படையில், அந்த பதவிக்கு எம்.எச்.டி.பீ. கருணாரத்ன மற்றும் இஷார ஹேமாந்த ஆகியோரின் பெயர்களை நாமல் ராஜபக்ச பரிந்துரைத்துள்ளார்.
அமைச்சரின் நியமனம்
இந்நிலையில், நாமலால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு அமைய எம்.எச்.டி.பி கருணாரத்ன என்பவரை பிரதான நிறைவேற்று அதிகாரியாக அமைச்சர் நசீர் அஹமட் நியமித்துள்ளார்.
இதற்கான உத்தியோக பூர்வ நியமனக்கடிதம் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.