ரஷ்யா - உக்ரைன் இடையில் போர் நிறுத்தம்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் மே 9 முதல் மே 11 வரை மூன்று நாட்களுக்கு தற்காலிகப் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 29 திகதி அன்று ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நடத்திய தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இந்த போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
இந்த தற்காலிக போர் நிறுத்தக் காலத்தில் அனைத்து விதமான நேரடித் தாக்குதல்களும் நிறுத்தப்படுவதுடன், இரு நாடுகளும் தலா 1,000 கைதிகளைப் பரிமாறிக்கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

image Credit: NBC News
இதேவேளை, மிக நீண்ட மற்றும் கொடிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ட்ரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காலவரையற்ற போர் நிறுத்தம்
இதனிடையே, மே 8 மற்றும் 9 ஆகிய திகதியில் மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெறவுள்ள இராணுவ அணிவகுப்பை ஒட்டி ரஷ்யா ஏற்கனவே தனது போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது.

மறுபுறம், உக்ரைன் தனது சார்பில் காலவரையற்ற போர் நிறுத்த முன்மொழிவை கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்ததுடன், அதற்கு ரஷ்யாவும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்த்தேசியம் தனிநபர் தோல்விகளால் எடைபோட முடியாத ஓர் இருப்பின் அரசியல்! 16 மணி நேரம் முன்
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம்
4 நாட்கள் முன்