பல்ல சேன சிறைச்சாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த STF படையினர்...!
🛑 புதிய இணைப்பு
பல்ல சேன சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சிறைக்கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் ஆரம்பமாகியுள்ளதுடன், கைதிகள் சிறை அதிகாரிகளை நோக்கிப் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையைச் சுற்றிப் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பின்வரும் பாதுகாப்புப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
- இலங்கைப் காவல்துறையினர்
- காவல்துறை விசேட அதிரடிப்படை (STF)
- கலாபக் கட்டுப்பாட்டுப் பிரிவு (Riot Control Unit)
- இலங்கை விமானப்படை
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 இரண்டாம் இணைப்பு
பல்ல சேன சிறையில் கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக காவல்துறை, காவல்துறை சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
🛑 முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு - பல்லசேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிறையிலுள்ள கைதிகள் சிறைக்கு வெளியே கற்களை வீசி எறிவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையிலும் கலவரம்
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லசேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், நேற்று இரவு (06-08-2026) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து இன்று காலை முதல் (07-08-2026) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |