அரச மிருகத்தனத்தை ஒன்றிணைந்து தோற்கடிப்போம் - சஜித் சூளுரை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரும் அரச மிருகத்தனம் மற்றும் பயங்கரவாதத்தின் மூலம் இந்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை அழிப்பதே இந்த அரசாங்கத்தின் ஒரே நோக்கமாகும்.
இந்த நோக்கத்தை முறியடிக்க அனைத்து முற்போக்கு சக்திகளையும் திரட்டி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
மகாசங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், பல் இன அமைப்புகள் மற்றும் சிவில் சமூகம் உட்பட பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராகவுள்ளனர். மல்வத்து தேரர் கூட இச்சட்டம் மிகவும் பயங்கரமான சட்டம் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை போற்றும் அனைவரும் இணைந்து இதனை முறியடித்து பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள இந்த சர்வதிகார எதேச்சதிகார சட்டத்தை முற்றாக தோற்கடிக்கத் தயார்” - எனத் தெரிவித்தார்.
