தாய்லாந்துடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை : ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு (படங்கள்)
தாய்லாந்தின் பிரதி நிதி அமைச்சர் ஜூலாபன் அமோர்ன்விவாட் மற்றும் சிறிலங்கா நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது, தற்போதைய பொருளாதார நிலை, சவால்கள், வாய்ப்புக்கள், மற்றும் பொருளாதாரத்தை நிலைப்படுத்த தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறிலங்கா நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகள்
அத்துடன், இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், நீடித்த அபிவிருத்திக்காக பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய துறைகளில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக தாய்லாந்து உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(1/2) Had a fruitful meeting with HE Julapun Amornviva, Deputy Finance Minister, Thailand. We discussed the current economic landscape, challenges, opportunities and the importance of implementing effective policies to support economic stability. pic.twitter.com/txGxMmYaln
— Shehan Semasinghe (@ShehanSema) November 3, 2023




முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 5 மணி நேரம் முன்