தையிட்டி வரை தமிழ் மக்களை ஏமாற்றும் அநுர அரசு : சரமாரியாக சாடிய சிவாஜிலிங்கம்
இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தற்போதான தையிட்டி விவகாரம் வரை தொடர்ந்து தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம. க. சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் அரசியல் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில், “புதிய அரசாங்கத்தை தமிழ் மக்கள் மிகவும் நம்பிக்கையின் அடிப்படையில் தெரிவு செய்த நிலையில் தற்போது அந்த நம்பிக்கை பொய்த்து போகும் படியாக தற்போதைய அரசாங்கம் நடத்துகொள்கின்றது.
ஒரு புதிய வேடமிட்டு, ஒரு புதிய சொல் நிலையில் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி அவர் செயற்படுகின்ற நிலையில் அவரது நடவடிக்கையை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தற்போதைய ஆட்சி சூழல், அதில் தமிழ் மக்கள் மீதான ஈடுபாடு, எதிர்கால அரசியல் மற்றும் தமிழ் அரசியல் எதிர்காலம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய அரசியல் களம் நிகழ்ச்சி,
you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
