வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை விமர்சிப்பது பெரும் அபத்தம்! ஐங்கரநேசன் காட்டம்

By Kajinthan Jul 30, 2026 12:52 PM GMT
Report

தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றுத் தடயங்களை நாமே மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெருத்த அபத்தம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு நேற்று புதன்கிழமை (29.07.2026) கொக்குவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடும் வறட்சி வில்பத்து பூங்கா குளங்கள் வற்றின : பவுசர்கள் மூலம் நிரப்பப்படும் நீர்

கடும் வறட்சி வில்பத்து பூங்கா குளங்கள் வற்றின : பவுசர்கள் மூலம் நிரப்பப்படும் நீர்

ஒரு வரலாற்றுத் தவறு

ஈழத்தமிழர்களின் அறிவுக் கருவூலமாகத் திகழ்ந்த தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981ஆம் ஆண்டு எரியூட்டி அழிக்கப்பட்டது.

வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை விமர்சிப்பது பெரும் அபத்தம்! ஐங்கரநேசன் காட்டம் | Thamizh Thaesiya Arasiyal Criticism Speech

ஈழத்தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும், வேறு எங்கும் காணக்கிடைக்காத வரலாற்று ஆவணங்களும் ஓலைச்சுவடிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன. இந்த நாசகாரியத்தை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மேற்பார்வையில் அரச படைகளே அரங்கேற்றியது.

நமது வரலாற்றில் நாம் சந்தித்த மிகப்பெரும் பண்பாட்டுப் படுகொலை இது. ஒரு வரலாற்றுக் கடத்தியாக எரியுண்ட நூலகத்தை அதே நிலையில் நாம் பேணிப்பாதுகாத்திருக்க வேண்டும்.

ஆனால், ஒரு வரலாற்றுத் தவறாக நூலகத்தைப் புனரமைத்து நடந்தது எதுவுமே தெரியாதவாறு வெள்ளையடித்து பேரினவாத அரசைப் பாதுகாக்கும் வரலாற்றுப் பிழையையே நாம் இழைத்தோம். இலங்கையில் தமிழினம் மீது 1956 இல் நிகழ்த்தப்பட்ட கல்லோயாப் படுகொலை தொடங்கி 2009 இல் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலைவரை பல தடவைகள் இனவழிப்புக்கு ஆளாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பாக, 1983இல் நிகழ்த்தப்பட்ட 'கறுப்பு ஜீலை' தமிழினப்படுகொலையே அதிகூடிய எண்ணிக்கையான உயிரிழப்புகளையும், பலகோடிப்பெறுமதியில் சொத்திழப்புகளையும் ஏற்ப்படுத்திய முதலாவது இனப்படுகொலையாகும்.

இதுவே உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ் மக்களை எதிலிகளாக இடம்பெயரவைத்த முதலாவது படுகொலையுமாகும். ஆனால் இவற்றையெல்லாவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய நினைவுச் சின்னங்களை இதுவரையில் நாம் அமைக்க முற்படாததும் பெரும் வரலாற்றுத் தவறே. செம்மணிப் புதைகுழியிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் எலும்புக்கூடுகளுக்கும் நாளை இதே நிலை ஏற்பட்டுவிக்கூடாது."என்றார்.

வத்தளை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது!

வத்தளை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020