தனி எதிரணியாக அங்கீகரிக்குமாறு 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தம்மை தனி எதிரணியாக அங்கீகரிக்குமாறும் குழுவாக அங்கீகரிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) 16 பாராநாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (SLFP) 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர்.
113 ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் காட்டும் எந்தவொரு குழுவிற்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தை வழங்கத் தயார் என அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததை அடுத்தே சுயாதீனமாகச் செயற்படுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.