யாழ்ப்பாணத்தில் தன்னை கடித்த பாம்புடன் வைத்தியசாலைக்குச் சென்ற சிறுவன்
sri lanka
jaffna
people
investigation
By Shalini
யாழ்.சாவகச்சேரியில் நாக பாம்பு கடிக்கு இலக்கான 15 வயது சிறுவன், தன்னை கடித்த நாக பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து உடனடியாக சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். .
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் 15 வயதான இச் சிறுவன் நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து அந்த சிறுவனும் அவனுடைய நண்பர்களும் இணைந்து கடித்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்துக் கொண்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
இதன்போதே சிறுவனை கடித்தது நாக பாம்பு என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருக்கின்றார்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 11 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி