கொழும்பின் புறநகர் பகுதியில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு
Srilanka
Corpse
suitcase
(Nihal Taltuwa
By MKkamshan
கொழும்பின் புறநகர் பகுதியான சப்புகஸ்கந்த - மாபிம என்ற இடத்தில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை காவல்துறை ஊடக பேச்சாளர் நிஹால் தல்த்துவ(Nihal Taltuwa)உறுதிப்படுத்தியுள்ளார்.
சப்புகஸ்கந்த - மாபிம என்ற இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பயணப்பையொன்றை சோதனையிட்ட போதே அதில் பெண்ணின் சடலம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.