அவசரகால சட்டமும் பயனற்றதே! இந்த அரசாங்கம் தேவையா? - கடுமையாக சாடும் எதிர்க்கட்சி

SJB Economy Mahinda Rajapaksa SriLanka Ranjith Madhuma Bandara
By Chanakyan Oct 13, 2021 11:57 AM GMT
Report

பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காகவே கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும் விலைகள் குறைக்கப்படுவதற்கு பதிலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார ( Ranjith Madhuma Bandara) தெரிவித்துள்ளார்.

கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

எரிவாயு விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன. கோதுமை மாவு ஒரு கிலோ 10 ரூபாவால் உயர்ந்துள்ளது. வரலாற்றில் இவ்வாறான விலை உயர்வுகள் ஏற்ப்பட்டதில்லை. அரசாங்கம் விலைகளை கட்டுப்படுத்தியுள்ளது என்று கூறினாலும் விலைகளை அதிகரிப்பது நிறுவனங்களே.

எனவே அரசாங்கம் என்ற ஒன்று தேவையா? அரச தலைவர், பிரதமர், அமைச்சரவை மற்றும் இந்த அரசாங்கமே பயனற்ற ஓர் ஆட்சியாக மாறியுள்ளது. இவர்களை தாண்டி முதலாளிகளும் நிறுவனங்களுமே தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்.

இந்த அரசாங்கம் அதனது நிர்வாக முகாமைத்துவத்தை இழந்து செயற்ப்படுகிறது. அரிசி விலையை அரிசி ஆலை உரிமையாளர்களும் நிறுவனங்களும் மேற்கொண்டால், எரிவாயு விலையை நிறுவனம் மேற்கொண்டால், பால்மாவின் விலையை நிறுவனம் மேற்கொண்டால் ஏன் இத்தகைய ஒரு அரசாங்கம் தேவை.

பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் டொலர் இல்லை ஆனால் அரசாங்க குடும்ப அங்கத்தவர்களிடம் போதியளவு டொலர்கள் உள்ளது என்பதையே பன்டோரா பத்திரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இத்தகைய கொள்ளையை நிறுத்தி மக்களுக்கு நிவாரனங்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா தான் காரணம் என்று அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் கூறுகிறார்கள். எமது பிராந்திய ஏனைய நாடுகளை பாருங்கள் இந்தியா, பங்களாதேஷ், சிங்கபூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் சிறந்த முகாமைத்துவத்தால் பொருளாதார இருப்பை பேணியுள்ளனர்.

அரச வருமானத்தை 1/3 ஆக குறைத்து உற்ற நண்பர்களூக்கு 600 மில்லியன் வருமானத்தை பெற்றுக் கொடுத்தனர். முறையற்ற அரச நிர்வாகமே தற்போதைய பொருளாதார சிக்கல்களுக்கு பிரதான காரணமாகும். அண்மையில் அரச தலைவரே தனது இயலாமையை ஒப்புக்கொண்டார்.

திறமையற்ற அரச தலைவரை  நியமித்துக் கொண்டு அதற்கேற்ற அடிமைகளையும் நியமித்துக் கொண்டு இந் நாட்டை குட்டிச் சுவராக்கியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கமே சுவர் ஓவியங்களை வரைந்தது. சீனியாலும் அன்டிஜெனாலும் மேற்கொண்ட மோசடிகளை காண்பித்தே இன்று சுவர் ஓவியங்களை வரைய வேண்டியுள்ளது.

அமைச்சர் கம்மன்பில கூறுவதைப் பார்த்தால், எண்ணெய் விலை உயரும் போல, அவ்வாறு உயர்ந்தால் பொருட்களின் விலைகள் மீண்டும் உயரும். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நான்கரை ஆண்டுகளாக எண்ணெய் விலையை ஒரே நிலையில் வைத்திருந்தோம்.

இதுலிருந்து புலப்படுவது தோல்வியுற்ற அரசாங்க நிர்வாகமே? அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தலைகீழாக உள்ளது. அரிசிக்கு ஒரு வர்த்தமானியை வெளியிடப்படுகின்றனர். சீனிக்கு ஒரு வர்த்தமானியை வழங்கப்படுகின்றன.

வெளியாகிய அனைத்து வர்த்தமானிகளும் மீளப் பெறப்படுகின்றன. உலகில் எங்கும் செய்ய முடியாத ஒன்றை இலங்கையில் செய்ய அரச தலைவர் முயற்சிக்கிறார். உலகில் எந்த நாடும் 100% கரிம உரத்தைப் பயன்படுத்தவில்லை.

யப்பானில் எங்களை விட அதிக தொழில்நுட்பம் உள்ளது. அவ்வாறு இருந்தும் யப்பான் கூட கரிம உரங்களை பயன்படுத்துகிறது. ஜே ஆர் ஜயவர்தன திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) யுத்தத்தை வெற்றி கொண்டார்,இது போன்றே ஜனாதிபதி தனது பெயரை வைத்துக்கொள்வதற்காக இதை செய்கிறார். அவர் கரிம உரங்களை தடை செய்து நாட்டை அழித்துள்ளார் என்று கூறினார்.

இன்று மக்கள் சோளம் பயிரிடும் பருவ காலம் முடிவடைகிறது. மழைக்காலத்தில் சோளத்தை பயிரிடாவிட்டால் செடிகள் வளராது. அது விவசாய அமைச்சருக்கு புரியவில்லை. அமைச்சர் பந்துல குணவர்தன கூறுவதை இன்று யாரும் நம்புவதில்லை.

அவர் வெள்ளைப்பூண்டு மோசடியை மூடி மறைக்க முயற்சிக்கிறார். ஒரு காலத்தில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவால் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உணவு உட்கொண்டு வாழலாம் என்று கூறுகின்றனர் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017