புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு
அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
ஆலோசனை இல்லாமை, கொள்கையில் முரண்பாடுகள் மற்றும் மாணவர்கள் மீது ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை இது சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், “தொழிற்சங்கம் சீர்திருத்தங்களை முற்றிலும் எதிர்க்கின்றது.
வெளியிட்ட சுற்றறிக்கை
இந்த சீர்திருத்தங்களில் புதிதாக எதுவும் இல்லை, அவை முன்பே விவாதிக்கப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சர் வகுப்பு அளவை 30 மாணவர்களாகக் குறைப்பது பற்றிப் பேசுகிறார் ஆனால் இந்த ஆண்டு அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஒரு வகுப்பிற்கு 40 மாணவர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது எப்படி ?
சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் அல்ல, தேசிய கல்வி ஆணைக்குழுவே வரைவு செய்ய வேண்டும்.
மூலோபாய தொலைநோக்கு
அந்த நிறுவனத்திற்கு மூலோபாய தொலைநோக்கு பார்வை இல்லை, இந்த சீர்திருத்தங்களை வரைந்த குழு தேசிய கல்வி நிறுவனத்தில் உள்ளது.
அவர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை, பாடசாலையிலிருந்து இடைவிலகல் பற்றி ஜனாதிபதி பேசினார்.
ஆனால் இந்த சீர்திருத்தங்கள் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும், இந்த தன்னிச்சையான முடிவுகளை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
