அடுத்தவாரம் நீக்கப்படுகிறது ஊரடங்கு -அரசாங்கம் அறிவிப்பு
lifted
next week
isolation curfew
By Sumithiran
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அடுத்த வாரம் நீக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், மூன்று வாரங்களுக்கு நாட்டை மூடியதால் கொவிட் இறப்பு எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது எனத் தெரிவித்தார்.
எனினும் படிப்படியாக நாட்டைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இந்த செயல்முறை பற்றி அமைச்சர் விரிவாகக் கூறவில்லை.