மக்களுக்கு மேலும் ஒரு அடி! மண்ணெண்ணெயின் விலையும் அதிகரிக்கப்படலாம்
மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்வதால் அரசாங்கத்துக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாகவும் அரசாங்கம் பயன்படுத்தும் விலைச்சூத்திரத்தின்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 275 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் ரூ.400ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மண்ணெண்ணெய் மாத்திரம் விநியோகம் செய்வதற்கான நிரப்பு நிலையங்களை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனூடாக, இலகுவாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.